Sunday, December 5, 2010

ஹா...ஹா...ஹா............

ஆசாமி: ஏதோ...நேரு ரேடியோவாமே... அந்த ரேடியோ இருக்கா?

கடைக்காரர்: இன்னாது, நேரு ரேடியோவா?

ஆசாமி: அட, அதாங்க ரகசிய உரையாடலெல்லாம் வெளிய வருதுன்னு சுப்ரமணிய சாமிகூட சொன்னாரே...அந்த ரேடியோ.
கடைக்காரர்: யோவ்..அது நேரு ரேடியோ இல்ல. நீரா ராடியா...

சுப்புணி: டேய்... கோண்டு, மாமா ஏன் ரொம்ப கவலையாய் இருக்கார்?

கோண்டு: அதோன்னுமில்லடா சுப்புணி, மாமா நேத்து, பக்கத்தாத்து மாமியிண்ட ஜொள்ளு விட்டுண்டிருந்ததை 'விக்கி லீக்ஸ்'ல வீடியோவா போட்டுட்டாளாம். அதான் என்ன நடக்குமோன்னு நடுங்கிண்டிருக்கார்.

Friday, November 26, 2010

ரூ.ரெண்டு போட்டு பதினொரு சைபர் ஊழல்...தமாசு.



அண்ணே ... 2G ஸ்பெக்ட்ரம் விற்பனையில் நீங்க நெறைய தள்ளுபடி கொடுத்தீங்களாமே, அல்லாத்தையும் ஒன்பது வருஷத்துக்கு முந்தின விலையிலேயே வித்தீங்களாமே. நீங்க எவ்வளோ நல்லவரு. உங்கள போய் மந்திரி பதவீலேந்து எடுத்துட்டாங்களாமே, ஏன்னா நாயம் இது? நல்லவங்களுக்கு இது காலமில்லீங்கண்ணே... அவுங்க கெடக்குறாங்க உடுங்க.

ஹீ,ஹீ,... அண்ணே, அப்படியே, பழைய விலையிலேயே... அதாங்கண்ணே...ஒம்பது வருஷத்துக்கு முன்னாடி வித்த விலையிலேயே ஒரு பத்து பவுனு...தங்கம், அப்புறம், ஒரு மூணு மூட்டை பொன்னி அரிசி, மூணு கிலோ வெள்ளி, அப்புறம் கொஞ்சம் பாத்திரம்,பண்டம்,...

அட... காய்கறியெல்லாம் என்ன வெலவிக்குது இப்போ... அதனால பழைய விலையிலேயே எல்லா காயும் மூணு,மூணு கிலோ போதும். அப்பொறம்...தாம்பூலத்துக்கு வெத்தல, பாகு, மூணாவது...தேங்கா, பலகாரப்பொட்டலம், ம்ம்...

அட... ஜவுளிய மறந்துட்டேங்கண்ணே... முகூர்த்ததுக்கு, பொண்ணு அழைப்புக்கு,...

அண்ணே, அண்ணே, அண்ணே,... ... ஓடாதீங்கண்ணே.... ஒங்கள நம்பித்தான் நம்ம தமிழரசிக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்கேன்.

அண்ணே,..அண்ணே...

Saturday, November 6, 2010

எந்திரன்- நேற்று, இன்று, நாளை....

ஆரம்பிச்சுட்டாங்கப்பா.....
எந்திரன் படம் ரிலீசுக்கு முன்னால பாடல் வெளியீட்டு விழா, டிரைலர் வெளியீட்டு விழா, என்று திகட்டும் அளவுக்கு அள்ளி வழங்கினார்கள். படம் வெளி வந்தவுடன் எப்படா நேரம் என்று பார்த்து, படம் தயாரித்த விதம் என்று மீண்டும் திகட்ட வைக்கிறார்கள். ஆனால் கூட தயாரித்த விதம் பார்ப்பதற்கு கொஞ்சம் மலைப்பாகத்தான் இருக்கிறது. சரி...தயாரிப்பில் ஏகப்பட்ட வெள்ளைக்காரர்கள் வருகிறார்களே, இந்த படமும் ஹாலிவுட் படம்தானோ?

Sunday, October 17, 2010

எந்திரன் - எண்பது ரூபாயில்!



ஒரு வழியாக வந்து விட்டான் 'எந்திரன்'. எந்த தமிழ் படத்துக்கும் இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள், அதுக்கு பல படிகள் மேலே சென்று விளம்பரங்கள், அனைத்து ஊடகங்களையும் தன் ஆக்கிரமிப்புக்கு கொண்டு வந்து இதை பார்த்தே ஆக வேண்டும், இதை மட்டுமே பார்க்க வேண்டும், திரைப்படம் என்றால் 'எந்திரன்' என்ற அளவுக்கு திகட்ட வைத்து விட்டார்கள். ரஜினிகாந்த் ரசிகனான எனக்குகூட இந்த ஓவர் டோஸ் வைத்தியம் வெறுத்து போக, "டிக்கட் விலை குறைந்தாலே ஒழிய பார்ப்பதில்லை" என்ற வைராக்கியத்தோடு பொறுமை காத்த எனக்கு, எண்பது ரூபாயில் 'எந்திரன்' நேற்றுதான் அமைந்தது. இப்போது எந்திரனை பற்றி பேசுவோம்.
விஞ்ஞானத்தை அஞ்ஞானம் தொற்றி கொண்டால் என்ன ஆகும்? எந்திரன் ஆகும்.
'ரோபோட்டிக்ஸ்' விஞ்ஞானியான ரஜினியின் பத்து வருட அயராத முயற்சியில் அவதரித்த புத்திரன்தான் 'எந்திரன்'. சொல்லி கொடுத்தவற்றை கன கச்சிதமாக நொடிப்பொழுதில் முடிக்கும் ரோபோ. கண்ணை சற்று மூடிக்கொண்டு உங்களை ஒரு மாவீரனாக, சகலகலா வல்லவனாக நினைத்து பாருங்கள். இப்போது கண்ணை திறந்து எந்திரனை நினைத்து கொள்ளுங்கள். உங்களை விட நூறு மடங்கு பராக்கிரம சாலி இந்த எந்திரன். அந்த பராகிரமசாலியை இந்திய ராணுவத்தில் பயன்படுத்தினால் நம்ம பங்காளிகளை பந்தாடிவிடலாம் என்ற நோக்கத்தில் ரஜினி எந்திரனை உருவாக்குகிறார். ஆனால் உள்ளுரிலேய ஒரு பங்காளி இருப்பதை அவர் உணரவில்லை. அந்த பங்காளி (ரஜினியின் மூத்த அதிகாரி) எந்திரனை வெளி நாட்டு பங்காளிகளுக்கு விலை பேச திட்டமிடுகிறார். 'எந்திரன்' ஒரு ஆபத்தான விஷயம், அதை ராணுவத்தில் பயன் படுத்துவது தவறு என்று சாதித்து ரஜினியை (வழக்கம்போல) அழுத்தி வைக்கிறார். எந்திரனுக்கு உணர்வுகளை கற்று தருமாறு ரஜினியை தூண்டுகிறார். இந்த சதியை உணராத ரஜினி, எந்திரனுக்கு உணர்வுகளை கற்று தருகிறார். கோபம், துக்கம், காதல், அன்பு, என்று எல்லா உணர்வுகளையும் கற்றுக்கொண்ட எந்திரன், காதல் விஷயத்தில் ரஜினிக்கே போட்டியாக வந்து வில்லனாக மாறுவதுதான் கதையின் சாரம். சங்கர் படம் என்றாலே பிரமாண்டத்துக்கு குறைவு இருக்காது. எந்திரனும் அப்படித்தான். இதில் பிரமாண்டம் ஓவர் டோஸ். ரஜினிகாந்த் இருபது வயது குறைவாகதெரிவது சந்தோஷம் தருகிறது. எந்திரன் ரஜினி, விஞ்ஞானி ரஜினியை எல்லா விதத்திலும் மிஞ்சி விடுகிறார். (மூன்று முகம்-அலெக்ஸ் பாண்டியன் போல). ஓடும் ரயிலில் எந்திரன் பறந்து, பறந்து சண்டை போடுவது சூப்பர்ப். சமையல், வீடு வேலை, நடனம், சண்டை, அறிவு என்று அனைத்திலும் எந்திரன் அமர்க்களப்படுத்துகிறான். ஐஸ்வர்யா ராயுக்கு வயது ஆக ஆரம்பித்து விட்டது கொஞ்சம் தெரிகிறது. பாடல்கள், சொல்ல தெரியவில்லை. கொஞ்ச நாட்கள் கழித்து பிடிக்குமோ, என்னவோ? படம் முழுக்க "கிராபிக்ஸ்" மயம். (என் மகன் "இந்த சீன், G.T.A வைஸ் சிட்டி விளையாட்டில் வருகிறது" என்று சொன்னபோது சிரிப்பு வந்தது)
எலக்ட்ரிகல் என்ஜினீயரிங் படித்ததால் சில, பல குறைகளை கூறாமல் இருக்க முடியவில்லை. எந்திரனுக்கு "பாட்டரி லோ" வருவது ஏதோ 'நோக்கியா' செல் போன் பாட்டரி போல் சொல்லியிருக்க வேண்டாம். பல வருடங்களாக விண்ணில் 'பாட்டரி லோ' ஆகாமல் சுற்றி வரும் விண்கலங்களை நினைவில் கொண்டிருக்கலாம். க்ளைமாக்ஸ் சண்டையில் "பார்மேஷன்" என்ற கட்டளையில் நூறு, இருநூறு, ஐநூறு, ஆயிரம் என்று எந்திரர்கள் தானாக உருவாகி 'அனகோண்டா', 'ஹல்க்', 'டெர்மினேட்டர்' கிளைமாக்ஸ் களை எல்லாம் ஒன்று சேர்த்திருக்க வேண்டாம்.
மொத்தத்தில் எந்திரனுக்காக இயக்குனர் சங்கருக்கு ஒரு ஜே!
முப்பது வயது ரஜினிக்கு ஒரு ஜே!!
பலவருடங்களுக்கு முன்னதாகவே இந்த கதையை உருவாக்கித்தந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கு ஒரு ஜே!!!
எந்திரன் - அமோக விற்பனை.

Saturday, September 25, 2010

அந்தமான் ஜெயில்

உங்க உடம்ப பார்த்தா ஜெயில் கைதி மாதிரி தெரியிலையே?

இந்த லொள்ளு தானே வேணாங்குறது! வீர முழக்கம் செய்யும்போது என்ன இளிப்பு?

Thursday, August 19, 2010

நினைத்தாலே இனிக்கும்

ஒரு அழகான காதல் பாட்டை கேளுங்க....பாருங்க.

Saturday, July 17, 2010

ரெங்குடுவின் ரெட்டைவால்

நான் ரொம்ப சமத்து, ஆங்கிலத்துல சொல்லணும்னா, "ரிசர்வ்ட் டைப்". ஆனாலும் சமயத்துல என்னையும் அறியாமல்? என் ரெட்டை வால் வேலை காட்டியிருக்கிறது, பல சமயங்களில். சாம்பிளுக்கு இதோ. வால் நம்பர் ஒண்ணு:
அரியமங்கலத்தில் சேஷசாயி இன்ஸ்டிடியுட்டில் தொழில் நுட்ப கல்வி படிக்கும்போது நடந்த விஷயம். கடைசி பீரியட் சீக்கிரம் முடிந்து விட்டால் ஓட்ட, ஓட்டமாக ஓடி வந்து 4:40 ரயிலை பிடித்து விட்டால் போதும், வீட்டுக்கு (லால்குடியில் இருக்கிறது) ஆறு மணிக்கெல்லாம் வந்து சேர்ந்து விடலாம்.....என்று புளுக மனமில்லை. அந்த ரயிலில்தான் டவுன் ஸ்டேஷனில் "எஸ்.ஆர். சி", எஸ்.வீ.எஸ்"பிகரெல்லாம் ஏறுவார்கள். அவர்களை நோக்கி ஜொள்ளு விட்டுக்கொண்டே வந்தால் ரயில் பயணம் போரடிக்காமல் இருக்கும். இதுக்கு போட்டி போட்டுக்கொண்டு கையில் 'மினி டிராப்டார்'ஐ தூக்கிக்கொண்டு ஓடி வந்து பிடித்து விடுவோம். சில நாட்களில் கடைசி பீரியட் ஆசிரியர் வரவில்லையென்றால் ஜாலிதான், நிதானமாக நடந்து வந்து தலையை வாரி ஒப்பனைஎல்லாம் செய்து கொண்டு வண்டியில் ஏறிவிடுவோம். அப்படி ஒருநாள் தான் என்னுடைய ரெட்டை வால் வெளியில் தலை காட்டியது. என் வாலை விட இரு மடங்கு நீளமானது நாகராஜனுடையது. அவன் ஐடியா தர, மற்ற நண்பர்களை வெறுப்பேத்த தயாரானோம். 'ப்ளான்' இதுதான். ரயில் வருவதற்கு முன் "கை காட்டி"யை இறக்குவார்கள். கை காட்டி இறங்கியதும் மாணவர்கள் தொலை தூரத்திலிருந்து ஓட்டமாக ஓடி வருவார்கள். 4: 20 கே வந்துவிட்ட நானும், நாகராஜனும் கை காட்டியை இறக்கும் கம்பியை ஒரு காலால் அழுத்தி இழுத்து பிடித்து கொண்டதும், கை காட்டி இறங்கி விட்டது. தூரத்திலிருந்து பார்த்த மாணவர்கள் ஓட்டம் பிடித்து வந்தார்கள். அவர்கள் நெருங்கி வந்தவுடன் கம்பியை விட்டு விட்டு அப்பாவியாக உட்கார்ந்து விட்டோம். இப்படி இரண்டு மூன்று முறை செய்து விட்டு, நான்காவது தடவை செய்யும்போது ஸ்டேஷன் மாஸ்டர் எங்களை கையும், களவுமாக பிடித்து எங்கள் 'வொர்க் ஷாப் சூபரின் டெண்டன்டிடம்' ஒப்படைத்து விட்டார். அவ்வளவுதான், எங்கள் பாசை பிடுங்கி எங்களை ஒரு வழி செய்து விட்டார்.

வால் நம்பர் ரெண்டு:
ஒரு முறை ரயில் ஒரு மணி நேரம் தாமதம் எனபதை ஸ்டேஷனில் உள்ள கரும் பலகையில் எழுத சொல்லி சாக்பீஸை எங்களிடம் ஸ்டேஷன் மாஸ்டர் கொடுக்க, அத்தனை ரயிலும் ஒரு மணி நேரம் தாமதம் என்று நாங்கள் வேண்டுமென்றே எழுதி விட வந்ததே கோபம் அவருக்கு. மீண்டும் வொர்க் ஷாப் சூப்பரிண்டேண்டன்ட், பின்பு பிரின்சிபால் என்று பெரியதாய் போய் விட்டது. ஒன்று சொல்ல வேண்டும். திருவாளர் அனந்த நரசிம்மாச்சார், அவர்தான் எங்கள் பிரின்சிபால், தெய்வமுங்க. "மன்னிப்பு" தமிழ்ல அவருக்கு தெரிஞ்ச ஒரே வார்த்தை.