Sunday, December 5, 2010
ஒரு விளம்பரம் ....சும்மா வெவ்வேவ்வேவே..
கவலைப்படாதே.... M-சீல் தடவு, பலமாக ஒட்டு.
மானத்தை பத்திரமா பாத்துக்க...
ஹா...ஹா...ஹா............
கடைக்காரர்: இன்னாது, நேரு ரேடியோவா?
ஆசாமி: அட, அதாங்க ரகசிய உரையாடலெல்லாம் வெளிய வருதுன்னு சுப்ரமணிய சாமிகூட சொன்னாரே...அந்த ரேடியோ.
கடைக்காரர்: யோவ்..அது நேரு ரேடியோ இல்ல. நீரா ராடியா...
கோண்டு: அதோன்னுமில்லடா சுப்புணி, மாமா நேத்து, பக்கத்தாத்து மாமியிண்ட ஜொள்ளு விட்டுண்டிருந்ததை 'விக்கி லீக்ஸ்'ல வீடியோவா போட்டுட்டாளாம். அதான் என்ன நடக்குமோன்னு நடுங்கிண்டிருக்கார்.
Friday, November 26, 2010
ரூ.ரெண்டு போட்டு பதினொரு சைபர் ஊழல்...தமாசு.

Saturday, November 6, 2010
எந்திரன்- நேற்று, இன்று, நாளை....
எந்திரன் படம் ரிலீசுக்கு முன்னால பாடல் வெளியீட்டு விழா, டிரைலர் வெளியீட்டு விழா, என்று திகட்டும் அளவுக்கு அள்ளி வழங்கினார்கள். படம் வெளி வந்தவுடன் எப்படா நேரம் என்று பார்த்து, படம் தயாரித்த விதம் என்று மீண்டும் திகட்ட வைக்கிறார்கள். ஆனால் கூட தயாரித்த விதம் பார்ப்பதற்கு கொஞ்சம் மலைப்பாகத்தான் இருக்கிறது. சரி...தயாரிப்பில் ஏகப்பட்ட வெள்ளைக்காரர்கள் வருகிறார்களே, இந்த படமும் ஹாலிவுட் படம்தானோ?
Sunday, October 17, 2010
எந்திரன் - எண்பது ரூபாயில்!

Saturday, September 25, 2010
Thursday, August 19, 2010
Saturday, July 17, 2010
ரெங்குடுவின் ரெட்டைவால்
நான் ரொம்ப சமத்து, ஆங்கிலத்துல சொல்லணும்னா, "ரிசர்வ்ட் டைப்". ஆனாலும் சமயத்துல என்னையும் அறியாமல்? என் ரெட்டை வால் வேலை காட்டியிருக்கிறது, பல சமயங்களில். சாம்பிளுக்கு இதோ. வால் நம்பர் ஒண்ணு:அரியமங்கலத்தில் சேஷசாயி இன்ஸ்டிடியுட்டில் தொழில் நுட்ப கல்வி படிக்கும்போது நடந்த விஷயம். கடைசி பீரியட் சீக்கிரம் முடிந்து விட்டால் ஓட்ட, ஓட்டமாக ஓடி வந்து 4:40 ரயிலை பிடித்து விட்டால் போதும், வீட்டுக்கு (லால்குடியில் இருக்கிறது) ஆறு மணிக்கெல்லாம் வந்து சேர்ந்து விடலாம்.....என்று புளுக மனமில்லை. அந்த ரயிலில்தான் டவுன் ஸ்டேஷனில் "எஸ்.ஆர். சி", எஸ்.வீ.எஸ்"பிகரெல்லாம் ஏறுவார்கள். அவர்களை நோக்கி ஜொள்ளு விட்டுக்கொண்டே வந்தால் ரயில் பயணம் போரடிக்காமல் இருக்கும். இதுக்கு போட்டி போட்டுக்கொண்டு கையில் 'மினி டிராப்டார்'ஐ தூக்கிக்கொண்டு ஓடி வந்து பிடித்து விடுவோம். சில நாட்களில் கடைசி பீரியட் ஆசிரியர் வரவில்லையென்றால் ஜாலிதான், நிதானமாக நடந்து வந்து தலையை வாரி ஒப்பனைஎல்லாம் செய்து கொண்டு வண்டியில் ஏறிவிடுவோம். அப்படி ஒருநாள் தான் என்னுடைய ரெட்டை வால் வெளியில் தலை காட்டியது. என் வாலை விட இரு மடங்கு நீளமானது நாகராஜனுடையது. அவன் ஐடியா தர, மற்ற நண்பர்களை வெறுப்பேத்த தயாரானோம். 'ப்ளான்' இதுதான். ரயில் வருவதற்கு முன் "கை காட்டி"யை இறக்குவார்கள். கை காட்டி இறங்கியதும் மாணவர்கள் தொலை தூரத்திலிருந்து ஓட்டமாக ஓடி வருவார்கள். 4: 20 கே வந்துவிட்ட நானும், நாகராஜனும் கை காட்டியை இறக்கும் கம்பியை ஒரு காலால் அழுத்தி இழுத்து பிடித்து கொண்டதும், கை காட்டி இறங்கி விட்டது. தூரத்திலிருந்து பார்த்த மாணவர்கள் ஓட்டம் பிடித்து வந்தார்கள். அவர்கள் நெருங்கி வந்தவுடன் கம்பியை விட்டு விட்டு அப்பாவியாக உட்கார்ந்து விட்டோம். இப்படி இரண்டு மூன்று முறை செய்து விட்டு, நான்காவது தடவை செய்யும்போது ஸ்டேஷன் மாஸ்டர் எங்களை கையும், களவுமாக பிடித்து எங்கள் 'வொர்க் ஷாப் சூபரின் டெண்டன்டிடம்' ஒப்படைத்து விட்டார். அவ்வளவுதான், எங்கள் பாசை பிடுங்கி எங்களை ஒரு வழி செய்து விட்டார்.
வால் நம்பர் ரெண்டு:ஒரு முறை ரயில் ஒரு மணி நேரம் தாமதம் எனபதை ஸ்டேஷனில் உள்ள கரும் பலகையில் எழுத சொல்லி சாக்பீஸை எங்களிடம் ஸ்டேஷன் மாஸ்டர் கொடுக்க, அத்தனை ரயிலும் ஒரு மணி நேரம் தாமதம் என்று நாங்கள் வேண்டுமென்றே எழுதி விட வந்ததே கோபம் அவருக்கு. மீண்டும் வொர்க் ஷாப் சூப்பரிண்டேண்டன்ட், பின்பு பிரின்சிபால் என்று பெரியதாய் போய் விட்டது. ஒன்று சொல்ல வேண்டும். திருவாளர் அனந்த நரசிம்மாச்சார், அவர்தான் எங்கள் பிரின்சிபால், தெய்வமுங்க. "மன்னிப்பு" தமிழ்ல அவருக்கு தெரிஞ்ச ஒரே வார்த்தை.
Sunday, June 27, 2010
சிங்கம் = தினத்தந்தி
கொட்டை எழுத்தில், அதிரடியாக தலைப்பு செய்திபோல் ஆரம்பித்து, நம் எதிர்பார்ப்புக்கு கொஞ்சமும் மாற்றமில்லாமல் சரியான நேரத்தில் பாட்டு, சரியான நேரத்தில் சண்டை, சரியான நேரத்தில் காதல், கலகலப்பு (அவ்வப்போது விவேக்கின் கடிப்பு) என்று மூன்று மணி நேரத்தில் நமக்கு என்ன
தேவையோ அதை சரியான விகிதத்தில் கொடுத்திருக்கிறார்கள். மொத்தத்தில் தினத்தந்தி பேப்பர் படித்த திருப்தி நமக்கு கிடைத்து விடுகிறது. மற்றபடி பட விமரிசனமெல்லாம் தேவையில்லை. Sunday, June 13, 2010
Tuesday, May 18, 2010
மவுன்ட் ஹாரியட் உச்சியிலிருந்து ஒரு க்ளிக்
Sunday, May 16, 2010
Monday, May 10, 2010
சம்மர் வந்தா ஆளு அப்ஸ்காண்டு!
Wednesday, April 28, 2010
உல்ட்டா..உல்டா...
Monday, April 5, 2010
Sunday, April 4, 2010
Monday, March 22, 2010
Sunday, March 21, 2010
சில டிப்ஸ்..சும்மாச்சுக்கும்.

ச்சே ...என்னமா தூங்குறாங்க. அட அடுத்த படத்த பாருங்க, அடாடா....என்ன சுகம், நம்ம ஊருக்கு இதெல்லாம் எப்ப வரும்? ஹ்ம்ம்.... சேலத்துலேந்து நெய்வேலிக்கு ராத்திரி ஒரு மணிக்கு ஒரு லங்கடா பஸ்ஸிலே ஏறி கடைசி சீட்டுல இரண்டு தூங்கு மூஞ்சிகளுக்கு நடுவே சிக்கிகிட்டபோது தோன்றிய ஐடியாக்கள்.- நம் தோளின் இரண்டு பக்கத்திலும் பழைய காலத்து ராஜாக்களின் கவசத்தில் கூறாக நீட்டிக்கொண்டு இருக்குமே, அதை நன்றாக தீட்டி வைத்து நம் தோள்பட்டையில் பொருத்திக்கொள்ளலாம்.
- நம் தோள் பட்டையில் மூக்குபொடியை தடவி வைத்துக்கொண்டால் அவர்கள் நம் மீது முகத்தை திருப்பி சாயும்போது பொடி மூக்கினுள் ஏறி அவர்களை எழுப்பிவிடும்.
- எலிப்பொறியை தோள்களில் பொருத்திக்கொண்டு அந்த கம்பி வளையத்தை கொக்கியில் மாட்டி வைத்துக்கொண்டு தயாராக இருந்தால், ஆசாமி நம் மீது சாயும்போது அவருடைய காது பொறியில் மாட்டிகொள்ளும். "அவுச்" என்று ஆசாமி எழுந்து விடுவார்.
- எலெக்ட்ரானிக் முறையில் ஒரு சைரன் செய்து தோளில் பொருத்திக்கொண்டால் ஆசாமி சாயும் போது சைரன் 'ஆக்டிவேட்' ஆகி, "வீ..வீ..வீ." என்று அவர் காதுக்குள் அலறும். அடுத்த முறை ஆசாமிக்கு தூக்கமே மறந்து போகும்.
- இதற்கெல்லாம் வசதி இல்லையா? வேறு வழி இன்றி 'ஹோலிபீல்ட்' கணக்காக காதை நன்றாக கடித்து விடுங்கள்.
இந்த கற்பனையெல்லாம் எழுந்து முடிவுக்கு வருவதற்குள் அந்த இரண்டு ஆசாமியும் தன் தலையிலிருந்த எண்ணையை (விளக்கெண்ணையோ, வேப்பெண்ணையோ தெரியவில்லை) நன்றாக சட்டையில் அப்பிவிட்டார்கள்.
Sunday, March 7, 2010
கத்திரிக்கா...கத்திரிக்கா..குண்டு கத்திரிக்கா..
மத்தியானம் புளியோதரையை ஓர் வெட்டு, வெட்டிவிட்டு ஒரு மணி நேரம் தலையை சாய்த்துவிட்டு எழுந்தேன். வாசலில் மணியோசையை கேட்டு வந்து பார்த்த போது என் நெடு நாளைய நண்பர் வந்திருந்தார். 'பயோடேக்னாலாஜி'யில் டாக்டரேட் பயில்கிறார். அவரிடம் அரைத்தூக்கத்தோடு அளவளாவியதில் சில,பல விஷயங்களை இங்கே பதிவு செய்கிறேன். முதலில் அவருடைய ஆராய்ச்சி பற்றி விசாரிக்கையில் நாம் அன்றாடம் 'அசூசி' படும் 'பாசி' பற்றி பல விவரங்களை கூறினார். பாசியின் பல வகைகள் பற்றியும், நீல-பச்சை பாசியின் மகத்துவம் குறித்தும் கூறுகையில் 'அசூசி' ஆச்சரியமாகி போனது. உலகின் மொத்த ஆக்சிஜன் தேவையில் சுமார் எழுபது சதவிகிதத்தை இந்த 'அசூசி'(நீல-பச்சை) பாசியே பூர்த்தி செய்கிறதாம். "வீட்டுக்கு ஒரு மரம் நடுவோம்" என்பதற்கு பதில் "தெருவுக்கு ஒரு குளம் வெட்டி பாசியை வளர்ப்போம்" என்று சொல்ல தூண்டியது. மேலும் சில வகைப்பாசியினால் உலகின் எரிபொருள் தேவையை ஈடு கட்ட முடியும் என்று கூறினார். Monday, March 1, 2010
Sunday, February 28, 2010
Monday, February 22, 2010
எங்கே பிராமணன்? தேடுகிறார் சோ.
"ஜெயா டி.வி" யில் சோவின் "எங்கே பிராமணன்-பாகம்-2" பார்த்தீர்களா?உண்மையான பிராமணனை, உண்மையாகவே தேடிப்பார்த்து களைத்துப்போய் விட்டாரோ சோ? வேறு வழியில்லாமல் அய்யராத்து பாஷை சுட்டுப்போட்டாலும் வராதவர்களை பேச வைத்திருக்கிறார்கள் சோவும், வெங்கட்டும். "ஆத்துக்கு போ" என்பதைத்தவிர ஒரு வார்த்தை கூட வரவில்லை அவர்களுக்கு. திடீரென்று "இன்னாத்துக்கு" என்றெல்லாம் பேசுவது ஒரே காமடி. சோ- சீரியசான விஷயங்களை தெளிவாக சொல்கிறார், சரி-ஆனால் எதிரே அமர்ந்திருப்பவர் 'லூஸ் மோகன்' ஸ்டையிலில் கேள்விகளை கேட்பது எடு படவில்லை. பார்ப்பவர்களுக்கு சீரியஸ்னஸ் குறைந்து விடுகிறது. (சோ-வை கேட்டால் நக்கல் சிரிப்போடு "குழப்புவதுதான் என் வேலை" என்பார்)
"நோக்கு தெரியுமோ? எங்கே பிராமணன்ல அசோக்கா நடிக்கிற கொழந்தை, சாயபு பையனாமே! நல்ல வேளை, நம்ம ஜெயஸ்ரீ யை அவனுக்கு பாக்கலாமோன்னு நெனைச்சுண்டு இருந்தேன்" என்று பட்டு மாமி பேசுவது கேட்கிறது. அசோக்- அத்தனை சமத்தாக நடித்திருக்கிறார். சோவின் முயற்சி முழு வெற்றி அடைய வேண்டுமென்றால் இன்னும் கொஞ்சம் சீரியசாக இருக்க வேண்டும் என்பதே என் கருத்து.
மொத்தத்தில் நல்ல முயற்சி. பிராமணன் என்று சொல்லிக்கொள்கிறவர்களுக்கு நிறையவே வருத்தம் கலந்த கோபம் வருவது உண்மை.
Sunday, February 21, 2010
இருநூறு வருடங்கள் பின்னோக்கி செல்கிறோம்...

வெறும் சிரிப்பு படங்களாக பார்க்க முடியவில்லை. மீண்டும் பழைய காலத்திற்கே செல்கிறோமோ என்ற கவலைதான் வருகிறது. இதற்காக அரும்பாடு பட்டு நம்மை பின்னோக்கி தள்ளுபவர்கள் நாம் ஓட்டு போட்டு உட்கார வைத்த அரசியல் வாதிகள்தான். சுயநலம் ஒன்றே தம் குறிக்கோளாக கொண்டுள்ள இவர்களை நாம் தான் இன்னும் அடையாளம் கண்டு கொள்ளாமலிருக்கிறோம். "இந்தியா வளர்கிறதே" என்று அந்நியர்கள் கவலைப்படலாம், ஆனால் இந்தியர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நம் அரசியல்வாதிகளே கவலைப்பட்டால்? Monday, February 8, 2010
சிறிது சிந்தனைக்கு........
Sunday, January 10, 2010
அட்வைஸ் பண்றாங்கோ, அட்வைஸ்....
ஆரோக்கியம் / உடல் நலம்
1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும், இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
4. தியானம், யோகா மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. 2009விட இந்த வருடம் நிறைய புத்தகம் படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.தன்னம்பிக்கை / சுயமுன்னேற்றம்
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டேஇருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.













